ஒரு பாரம்பரியமான அரச குடும்பத்தில் பிறந்திருந்தாலும்…
தான் உண்டு…தன் வசதியான வாழ்க்கை உண்டு..என்று வாழாமல்…

அழிந்து வரும்..தமிழ் நாட்டு கால்நடைகளை பற்றி கவலைப்பட்டு..
அதற்காக பல கோடிகளை செலவு செய்து காப்பாற்றி வரும் ஓர் சமூக ஆர்வலர்.

உலகையே உலுக்கிய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆணி வேர்.

தமிழர்கள் பற்றி பலரும் பல கதைகளை விட்டுக்கொண்டு…
தமிழை காப்பாற்ற தாங்கள்தான் அவதாரம் எடுத்து இருப்பதாக.. பீற்றி வரும் இந்த காலத்தில்…

தமிழர்களைப் பற்றியும்..
தமிழர்களின் உண்மை வரலாறு…பண்பாடு கலாசாரங்கள் பற்றியும்..
சுற்று சூழல் பற்றிய விழிப்புணர்வு குறித்தும்…

உலகெங்கும் பல கல்லூரிகளில்..பல மேடைகளில்..தனி ஒரு மனிதனாக..பரப்புரை செய்து வந்த…ஒரு கலாச்சார காவலர்.

இவரது ஒரு தாத்தா..குட்டபாளையம் சாமிநாதன்…ராபின்சன் பூங்காவில் திமுக தொடங்கிய நாளில் அங்கு இருந்தவர்…

அதனால் சமீபத்தில்…
தன்னை திமுக வில் இணைத்து கொண்டார்… இந்த கார்த்திகேய சிவ சேனாபதி.

‘சுற்று சூழல் பாதுகாப்பு அணி’ என்ற ஒன்றை திமுக… உருவாக்கி அதற்கு செயலாளராக..
திரு.கார்த்திகேய சிவ சேனாபதியை நியமித்திருகிறார்கள்.

‘இதனை… இதனால் இவன் முடிக்கும்.. என்று ஆய்ந்து… அதனை அவன் கண் விடல்’

என்ற திருக்குறளுக்கு ஏற்ப.. கார்த்திகேய சிவ தேனாபதி அவர்களிடம்….
இந்த பொறுப்பை கொடுத்த ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

களவாணி படத்தில்..விமல் கூறுவது போல…
“நான் சும்மாவே ஆடுவேன்..சலங்கையும் கட்டி விட்டால்…” என்பது போல..

உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்…..

திரு.கார்த்திகேய சிவ சேனாபதி அவர்களே..
வாழ்த்துக்கள் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *