நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை” என்கின்றது அவ்வையின் மூதுரை. ஏறத்தாழ 71 வயதுடைய ஒரு இயக்கத்தில் ஒரு அணி தனியொருவர் வரவையொட்டி புதிதாக உருவாக்கப்படுகின்றது என்றால் அவர்மீது கழகம் கொண்டிருக்கும் நம்பிக்கையின் அளவு எப்படியாக இருக்கும் என நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நிச்சயம் அண்ணன் Karthikeya Sivasenapathy
அவர்களும் அறிவார். அவர் வாழ்நாளில் பெருமையாக சொல்லிக் கொள்ளும் நிகழ்வுகளில் நிச்சயம் இது முதன்மையானதாக இருக்கும் என நம்புகின்றேன்.

அணி உருவாக்கப்பட்டது. மாநிலம் முழுதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இளையர்கள் என பலரும் புதிதாக இந்த அணியில் சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது.
அணியின் பணி நிச்சயம் கழகத்தின் அச்சாணிகளுக்கு உய(ர்)வாக அமையும் . வாழ்த்துகள்.

இவ்வளவு ஆண்டுகள் திமுகவில் இல்லையா என்ற ஆச்சர்யம் உண்டு. காரணம் அவரது பேட்டிகள் சிலவற்றில் வெறிபிடித்த திராவிட காளையின் குரலாக பார்த்துள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *