தி.மு.க-வில் சுற்றுச்சூழல் அணி உருவாக்கப்பட்டு, அதன் மாநிலச் செயலாளராக கார்த்திகேய சிவசேனாபதி நியமிக்கப்பட்டிருக்கிறார். கொங்கு மண்டலத்தில் சிவசேனாபதியின் வருகை, தி.மு.க-வுக்கு பலம் சேர்க்கும் என்று உடன்பிறப்புகள் நம்புகின்றனர்

சட்டசபைத் தேர்தலுக்காக, தங்களது திட்டங்களைக் கூர்தீட்டிவருகிறது தி.மு.க. கடந்த முறை கோட்டைவிட்ட இடங்களையெல்லாம் அலசி ஆராய்ந்து சரிக்கட்டி கொண்டிருக்கின்றனர். முக்கியமாக, தி.மு.க-வின் கொங்கு ஜுரத்துக்கு அதிகமாகவே மெனக்கெடுகின்றனர். ஏற்கெனவே, அதிருப்தியில் இருந்த கொங்கு சீனியர்களுக்குப் புதிய பொறுப்புகள் போடப்பட்டிருக்கின்றன. மேலும், காங்கேயம் காளைகள், நாட்டு மாடுகள் ஆராய்ச்சி என்று வலம்வந்துகொண்டிருந்த கார்த்திகேய சிவசேனாபதியை களமிறக்கியிருக்கிறது தி.மு.க. குறுகியகாலகட்டத்திலேயே தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட முதற்கட்ட பரப்புரைக் குழுவில் சிவசேனாபதி பெயர் இடம்பெற்றது.
மேலும், தி.மு.க-வில் புதிதாக சுற்றுச்சூழல் அணி உருவாக்கப்பட்டு, அதன் மாநிலச் செயலாளராகவும் கார்த்திகேய சிவசேனாபதி நியமிக்கப்பட்டிருக்கிறார். கொங்கு மண்டலத்தில் சிவசேனாபதியின் வருகை, தி.மு.க-வுக்கு பலம் சேர்க்கும் என்று உடன்பிறப்புகள் நம்புகின்றனர். சில கேள்விகளுடன் கார்த்திகேய சிவசேனாபதியிடம் பேசினோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *