தமிழ்நாட்டின் பயனற்ற மாநில அரசின் மீதும் தமிழ்நாட்டின் மீது மத்திய அரசு மேற்கொள்ளும் சர்வாதிகார போக்கிற்கு எதிராக மக்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர்.

இந்த கோமாளிகள் எல்லாம் சரியாகி போகும் என எண்ணுகின்றனரா ?

வடக்கின் மேலாதிக்கத்திற்காகவும், பெரு முதலாளிகளின் பேராசைக்காகவும் இரக்கமற்ற முறையில் தமிழகம் அழிக்கப்பட்டு வருகிறது .

1950 கள் முதல் 1970 வரை தமிழீழ மக்களுக்கு என்ன நடந்ததோ அது திட்டமிட்டு அரங்கேற்றபடுகின்றது. முறையான திட்டமிடலுடன் அரசியல் அமைப்புகளின், சட்டத்தின் துணையோடு நடைபெறுவதே அவலத்தின் உச்சம்!!

மக்கள் எதற்குத்தான், எத்தனைக்குத்தான் போராடுவது ?

ஸ்டெர்லிட், கெயில், கதிரஆமங்கலம், NEET , நீட் பரீட்சையில் தமிழ் மாணவர்களுக்கான தேர்வு பிற மாநிலங்களில், மற்றும் திட்டமிட்டு அனைத்து அரசு பணியில் பிற மாநிலத்தவரை நியமித்தல்…

தமிழ்நாட்டின் மக்கள்தொகையை மாற்றுவதற்கான ஒரு தெளிவான திட்டம் .

தேர்தல்களுக்காக காத்திருக்கின்றோம். ஆனால் அதற்கு முன் மாநிலத்தின் அழிவு தெளிவாகத் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டும் வருகின்றது .

– கார்த்திகேய சிவசேனாபதி
03-05-2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *