திரு. கமலஹாசன் அவர்களுக்கு.

அன்புடன் நான் எழுதும் கடிதமே !!

“நம்மவர், நாங்கள் இங்குச் சவுக்கியமே நீங்கள் அங்குச் சவுக்கியமா ??!!”

இதுவரை நான் உங்களுக்கு மடல் வரைந்தது இல்லை. பல்வேறு காரணங்களால் இப்பொழுது எழுத வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள்.

தெள்ளத்தெளிவாக NEET ற்கு ஆதரவு வழங்கி உள்ளீர்கள்.

“NEET எதிர்த்தால் தமிழகம் முன்னேறி விடுமா என்று ??”

தாங்கள் பல்வேறு மாநிலங்கள், பல நாடுகளுக்குச் சென்றவர். வேறு எதாவது மாநிலத்தில் தமிழகத்தில் இருக்கக் கூடிய சமூக நீதி, அனைவரும் மருத்துவர் ஆகும் வாய்ப்பு, அரசு மருத்துவமனையில் கட்டமைப்பு, சுகாதாரத்துறை, என மேம்பட்டு உள்ளதா ?

ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார மையம் தெற்கு ஆசியாவிலேயே, தமிழகத்தில் தான் சாமானியனுக்கு மருத்துவ வசதி சிறப்பாக கிடைக்கப் பெறுகின்றன!!!
என உறுதி செய்து உள்ளனர்.

இதற்கெல்லாம் காரணம் NEET அல்லாத நமது கல்வி முறை தான். ஆதலால் நீங்கள் எதற்காக NEET ஆதரவாக இருக்கின்றீர்கள் என விளங்கவில்லை ??!!!

இருந்தாலும் உங்களைத் தொடர்ந்து ஒரு நல்ல கலைஞனாக உங்கள் மீது என்று மாறாத பற்று கொண்ட உங்கள் ரசிகனாக தங்களின் அடுத்த படத்திற்காகக் காத்து இருக்கும்,

– கார்த்திகேய சிவசேனாபதி
14 -04 -2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *