அன்புள்ள திரு. ரஜினி காந்த் அவர்களுக்கு,

நலம் நாடுவது அதுவே !

தாங்கள் எட்டுவழி சாலை பற்றி கருத்து தெரிவித்து உள்ளீர்கள்.

இது  அவசியம் இல்லாத முன்னேற்றம். இதை தான் தமிழக மக்கள் எதிர்க்கின்றார்கள். இதை எல்லாம் பிரதிபலிக்கும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் திரு.ப.ரஞ்சித் அவர்கள் ஒரு சிறப்பான திரைப்படத்தை எடுத்துள்ளார். அந்த படத்தின் பெயர் “காலா”.

அதில் “சூப்பர் ஸ்டார் ” என்னும் நடிகர் நடித்துள்ளார். இது போன்ற மக்கள் விரோத பிரச்சனைகளை எவ்வாறு கையாள வேண்டும், எப்படி எதிர்க்க வேண்டும் என்றும், அரசு அதிகாரம் செய்வது பயங்கரவாதம் என்றும்  தெள்ளத்தெளிவாக கூறியுள்ளார்கள்.

அந்த படத்திலே எனக்கு மிக பிடித்தமான வசனம் என்னவென்றால் “நிலம் எங்கள் உரிமை ”

நன்றி !!

அன்புள்ள,

கார்த்திகேய சிவசேனாபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *