இன்று சென்னை உயர் நீதி மன்றம் சேலம் சென்னை – பசுமை வழிச்சாலைக்கு தடை விதித்து உள்ளது.

வரவேற்கத்தக்கது !!

இரண்டு விடயங்களை இதில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

1. சென்னை உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு டெல்லி உச்ச நீதிமன்றத்தின் கீழ் அடங்கும்.

2. ஆதலால் மேல் முறையீட்டிற்கு மனு ஏப்ரல் 19 ஆம் தேதியே தமிழக அரசால் அல்லது நடுவன் அரசால் தாக்கல் செய்ய முடியும்.

ஆதலால் தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திருமதி. தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களும் இதை தேர்தல் வாக்குறுதியாக “ நாங்கள் நிச்சயமாக சேலம் சென்னை எட்டு வழிச் சாலை – பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடுவோம்” என்று வாக்குறுதி கொடுப்பார்களா ??

#2019elections

– கார்த்திகேய சிவசேனாபதி
08-04-2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *