திரு.சிதம்பரம் ஏன் திருமதி.நளினி சிதம்பரத்தை வழக்காட அனுமதித்தார். அவரால் அவருடைய மனைவியை அந்த வழக்கிலே வாதாடாமல் நிறுத்த முடியாதா ?

திரு.குமரி ஆனந்தன் ஏன் அவருடைய மகள், மருத்துவரான தமிழிசை சௌந்தர்ராஜனை பாரதிய ஜனதா கட்சியில் பங்கு பெற அனுமதித்தார். அவரால் அவள் மகளைக் கூட கட்டுப்படுத்த முடியாதா?

திரு சீமான் ஏன் அவருடைய மாமனாரை இன்னும் அனைத்து இந்தியத் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளராகவே விட்டு வைத்து இருக்கிறார். அவரால் அவர் மனைவியைக் கட்டாயப்படுத்தி அவரை நாம் தமிழர் கட்சியில் சேர்க்க இயலவில்லையா ?

அல்லது திரு.காளிமுத்து ஏன் தனது மருமகனை நாம் தமிழர் கட்சியின் தலைவராக இருக்க விட்டு வைத்து இருக்கின்றார். ? அவரையும் அனைத்து இந்தியத் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளராக மாற்றி இருக்கலாமே.

இப்படிக் கேட்டுக் கொண்டே போகலாம் !!

– கார்த்திகேய சிவசேனாபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *