திருவள்ளுவருக்கு உடை மாற்றம் செய்த அரசியலுக்குப் பின் அடுத்ததாக வர இருப்பது தமிழ்த்தாய் வாழ்த்து !!

தமிழ்த்தாய் வாழ்த்தை அனைவரும் கொண்டாடுவது நலமே. வரவேற்கத்தக்கதே. தமிழ்த்தாய் வாழ்த்து எப்பொழுது தமிழகத்தின் தமிழக அரசினால் அரசாணை வெளியிடப்பட்டு நிறுவப்பட்டது ?

இதனை நிறுவியது யார் ?

தமிழ்த்தாய் வாழ்த்தைச் சிலர் ஏன் வெறுக்கிறார்கள் ? ஏன் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மரியாதை நிமித்தமாய் எழுந்து நிற்கக் கூட முடியாமல் ஒரு வெறுப்பை உமிழ்கிறார்கள்?
என்று எல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த் தாய் வாழ்த்தின் இரண்டாவது பத்தியில்

“ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!”

என்கின்றது. இது மட்டும் தான் இவர்கள் வெறுப்பின் காரணமா என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த் தாய் வாழ்த்து டெல்லியிலிருந்து வர இருக்கின்றது !!

– கார்த்திகேய சிவசேனாபதி
21-11-2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *